Sunday 12th of May 2024 01:08:28 PM GMT

LANGUAGE - TAMIL
-
பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில்  கத்தோலிக்க திருச்சபை சட்டங்களில் திருத்தம்!

பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபை சட்டங்களில் திருத்தம்!


பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை சட்டங்களில் போப் பிரான்சிஸ் திருத்தங்களை செய்துள்ளார்.

புதிய திருத்தத்தின் பிரகாரம் பாலியல் துஷ்பிரயோகம், சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தை மூடிமறைத்தல் உள்ளிட்டவை வத்திக்கான் சட்டத்தின் கீழ் ஒரு கிரிமினல் குற்றமாகுமாகும்.

முறைப்படி நியமிக்கப்படாமல் தேவாலயப் பதவிகளை வகிப்பவா்களுக்கும் இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்காக தண்டனை விதிப்பதற்கு புதிய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமாா் 130 கோடி கத்தோலிக்க தேவாலயங்கள் பின்பற்றும் சட்டத்தில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 14 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தங்கள் குறித்த அறிவிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE